மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 12,000 கனஅடியாக அதிகரிப்பு | Water release from Mettur for delta irrigation increases to to 12,000 cubic feet

1292158.jpg
Spread the love

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு இன்று (ஆக.8) காலை முதல் விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அணையின் நீர்மட்டம் 10 நாட்களுக்கு பிறகு 120 அடிக்கு கீழ் சரிந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பால், நீர்வரத்து அதிகரித்து, மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 27-ம் தேதி 100 அடியை எட்டியது. தொடர்ந்து, அணைக்கான நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டார்.

அதன்படி, கடந்த 28-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. . பின்னர், நீர் திறப்பு கடந்த 29-ம் தேதி 23,000 கனஅடி வரை அதிகரிக்கப்பட்டது. இதனிடையே, கடந்த 30-ம் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளவான 120 அடியை எட்டியது.

இதையடுத்து, அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நீர்வரத்து சரிந்தன் காரணமாக, உபரிநீர் வெளியேற்றம் நேற்று நிறுத்தப்பட்டது. பின்னர், டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நேற்று 21,500 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கு நீர் தேவை அதிகரித்தன் காரணமாக, நீர் திறப்பு இன்று காலை 9 மணி முதல் விநாடிக்கு 10,000 கன அடியில் இருந்து 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை நீர்வரத்து 10,000 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 6,367 கனஅடியாக சரிந்துள்ளது. அதேபோல், நீர்மட்டம் நேற்று 120 அடியாக இருந்த நிலையில் இன்று 119.54 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக இருந்த நிலையில், 92.74 டிஎம்சியாக சரிந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு பிறகு, அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் சரிந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *