மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்வு: நடப்பாண்டில் 7-வது முறையாக நிரம்ப வாய்ப்பு | Mettur Dam water level rises to 119 feet

1380330
Spread the love

மேட்​டூர்: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 10,374 கனஅடி​யாக அதி​கரித்​துள்ள நிலை​யில், அணை​யின் நீர்​மட்​டம் 119 அடியாக உயர்ந்​துள்​ளது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்த மழை, கர்​நாடகா அணை​களில் இருந்து உபரிநீர் திறப்பு உள்ளிட்ட காரணங்​களால் மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் ஏற்​கெனவே 6 முறை முழு கொள்​ளள​வான 120 அடியை எட்​டியது.

இந்​நிலை​யில், காவிரி​யில் நீர்​வரத்து குறைந்​தது, அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறப்பு காரண​மாக மேட்​டூர் அணை நீர்​மட்​டம் சரிந்​தது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​யும் மழை​யால் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​தும், குறைந்​தும் காணப்​படு​கிறது. அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 9,026 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்​து, நேற்று காலை 10,374 கனஅடி​யாக அதி​கரித்​தது.

இதனிடையே, கடந்த சில நாட்​களாக பெய்து வரும் மழை​யால், டெல்டா மாவட்​டங்​களில் பாசனத்​துக்​கான நீர் தேவை குறைந்​தது. எனவே, அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி நீர் மட்​டுமே திறக்​கப்​பட்டு வரு​கிறது. கால்​வாய் பாசனத்​துக்கு 500 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​படு​கிறது.

தண்​ணீர் திறப்​பை​விட நீர்​வரத்து அதி​க​மாக உள்​ள​தால் மேட்​டூர் அணை நீர்​மட்​டம் வேக​மாக உயர்ந்து வரு​கிறது. அணை நீர்​மட்​டம் 118.55 அடி​யில் இருந்து 119 அடி​யாக​வும், நீர் இருப்பு 91.17 டிஎம்​சி​யில் இருந்து 91.88 டிஎம்​சி​யாக​வும் உயர்ந்​துள்​ளது. நடப்​பாண்​டில் 7-வது முறை​யாக மேட்​டூர் அணை நிரம்ப வாய்ப்​புள்​ள​தால், நீர்​வளத் துறை அதி​காரி​கள், அணை​யின் 16 கண் மதகு பகு​தி​யில் உள்ள வெள்​ளக் கட்​டுப்​பாட்டு மையத்​தில் 24 மணி நேர​மும் நீரின் அளவைக் கண்​காணித்து வரு​கின்​றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *