தரிசனம் செய்ய வராத பொதுமக்கள்
இந்த நிலையில், வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன், இந்து சமய அறநிலயைத்துறை அலுவலர்கள், ஏடிஎஸ்பி தினகரன் உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திரௌபதியம்மனுக்கு கோயில் அர்ச்சகர் மோகன் பூஜைகளை செய்தார்.
இதையடுத்து மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமுதாய மக்கள் கோயிலுக்குள் அம்மனைத் தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும்வரவில்லை. மூன்று சிறுவர்கள் மட்டும் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்தனர்.
அதே நேரத்தில் காவல்துறையினர், வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத் துறையினர், செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோர் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு கோயில் மீண்டும் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை மட்டும் மாலை நேரத்தில் 5 மணி முதல் 6 மணி வரை கோயில் நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பாதுகாப்பு: விழுப்புரம் ஏடிஎஸ்பி தினகரன தலைமையிலான 2 ஏடிஎஸ்பிகள், ஒரு ஏ.எஸ்.பி. 6 டி.எஸ்.பி.க்கள், 10 காவல் ஆய்வாளர்கள், 25 காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமைக்காவலர்கள் முதல் காவலர்கள் நிலையில் 320 பேர் என போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.