மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: `மதமாற்றம் காரணமல்ல’ – விரிவான அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ

Spread the love

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா என்ற மாணவி, கடந்த 2022-ம் ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சித்தி கொடுமை, பள்ளியில் கொடுத்த கூடுதல் பணி போன்றவை காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் சில அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதனை மாவட்ட காவல்துறை முற்றிலுமாக மறுத்தது.

இவ்வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆனால் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்திரவிடப்பட்டிருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த அடிப்படையில் சிபிஐயும் தற்போது அறிக்கையை சமர்பித்திருக்கிறது.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை

உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில்

1. மாணவி லாவண்யாவின் மரணம் நிகழ்ந்ததற்கான காரணம் கட்டாய மதமாற்ற நெருக்கடியா அல்லது பள்ளியில் நிலவிய சூழலா அல்லது குடும்ப பிரச்னையா என அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தினோம்.

2. முதலில் பள்ளி சூழல் குறித்த விசாரணையை முதன்மையாக நடத்தினோம்.

3. மைக்கேல் பட்டி பள்ளியில் இருக்கும் விடுதியில் சகோதரி சகாயமேரி விடுதி காப்பாளராக பொறுப்பேற்ற பின்பு விடுதியின் மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், துணை விடுதி காப்பாளர்கள் அடிக்கடி பணியிலிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

4. விடுதி கணக்கு வழக்கு வவுச்சர் போன்றவற்றை தயாரிப்பதற்காகவும் விடுதி மாணவிகள் சகாய மேரியால் பயன்படுத்தப்பட்டார்கள்.

5. கடந்த கொரோனா காலத்தில் பள்ளி விடுதி முழுவதுமாக மூடப்பட்ட பின்பும் மாணவி லாவண்யா மட்டும் விடுதியிலே தங்கி இருந்திருக்கிறார், அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 24 முதல் 2020 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி வரை மாணவி லாவண்யா விடுதியிலே தங்கி இருக்கிறார்.

6. முதல் லாக் டவுன் முடிந்து விடுதி 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி மீண்டும் திறந்த பிறகு விடுதியில் துணை காப்பாளர்கள் இல்லாத காரணத்தால் லாவண்யாவிற்கு சில பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வருகை பதிவேடு பில் புத்தகம் விடுதிக்கான கட்டணம் வசூலிக்கும் புத்தகத்தை பராமரிப்பது உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

7. கொரோனா காரணமாக 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி வரை இரண்டாவது லாக் டவுன் சமயத்திலும் 20 நாள்கள் லாவண்யா விடுதியிலேயே தங்கியிருந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *