தில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சி 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனால் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக ஆட்சி அமையவுள்ளது. எனினும் முதல்வர் யார் என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
முதல்வர் போட்டியில், அரவிந்த கேஜரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சாஹிப் சிங், மாநில பாஜக தலை வீரேந்திர சச்தேவா, சுஷ்மா ஸ்வராஜின் மகள் பான்கரி ஸ்வராஜ் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரேகா குப்தா உள்ளிட்டோர் உள்ளனர்.