மோடி உருவப்பொம்மையை மரத்தில் தொங்கவிட்ட காங்கிரஸ்; ராகுல் உருவப்பொம்மையை மின்கம்பத்தில் தொங்கவிட்ட பாஜக! | Congress hangs Modi’s effigy on a tree; BJP hangs Rahul’s effigy on an electric pole!

Spread the love

பிரதமர் மோடி நேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மேலும், திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் தலைமையில் டதி ஸ்கூல் அருகே போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது அந்தப் பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் பிரதமர் மோடியின் உருவப்பொம்மையின் கழுத்தில் காவித் துணியைக் கட்டி தொங்கவிட்டுள்ளனர். போராட்டம் முடிந்து சென்றபிறகும் உருவப்பொம்மை அங்கேயே தொங்கிக்கொண்டிருந்தது. இதையடுத்து போலீஸார் உருவப்பொம்மையை அகற்றினர்.

இது குறித்து காங்கிரஸ் நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் கூறுகையில், “ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூறி தமிழர்களை திருடர்கள் என்ற வகையில் பேசியிருந்தார். அதனால்தான் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் போராட்டம் நடத்தினோம்” என்றார்.

மின் கம்பத்கில் கட்டி தொங்கவிடப்பட்ட ராகுல் காந்தி உருவபொம்மை

மின் கம்பத்கில் கட்டி தொங்கவிடப்பட்ட ராகுல் காந்தி உருவபொம்மை

இதை அடுத்து பா.ஜ.க-வினர் டதி ஸ்கூல் ஜங்சன் பகுதியில் நேற்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் காலையில் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வதாக உறுதி கூறியதை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *