“யார் துரோகி, யார் அப்பாவி, யார் செய்வது நியாயம் என தமிழக மக்களுக்குத் தெரியும்” – TTV தினகரன் |ttv.dinakaran met press people at tanjore

Spread the love

1952ல் இருந்து பல முறை எஸ்.ஐ.ஆர் நடத்தப்பட்டுள்ளது. பீகாரில் நடத்தப்பட்டதில் பல குற்றச்சாட்டுக்கள் வந்தது. தமிழ்நாட்டில் யாருக்கு வாக்குரிமை உள்ளதோ அவர்கள் பெயர் நீக்கப்பட்டு விடக்கூடாது. இறந்தவர்கள் மற்றும் டபுள் என்ட்ரி நீக்கப்பட வேண்டும். யார் துரோகம் செய்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என்றுதான் கூறி வருகிறேன். ஒரே கட்சியாக இணைய வேண்டும் என நான் என்றைக்கும் சொல்லவில்லை. மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்றால் அம்மாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஒரு குடையில், ஓர் அணியாக திரண்டால் தான் இன்றைக்கு இருக்கின்ற அரசியல் சூழலில் வெற்றி பெற முடியும்.

டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரன்

யார் துரோகி, யார் அப்பாவி, யார் செய்வது நியாயம் என தமிழக மக்களுக்குத் தெரியும். எல்லோருக்கும் இந்தத் தேர்தலில் உரிய பதிலை மக்கள் தருவார்கள். எல்லோரும் நீக்கப்பட்டது குறித்து என்னிடம் மன வருத்தத்தை சொல்லிய செங்கோட்டையன் ஒரு முடிவெடுத்து த.வெ.க-வில் இணைந்திருக்கிறார் என்ன நடக்கிறது என பார்ப்போம். கூட்டணி முடிவு தள்ளிப்போகிறது. ஜெயலலிதா பிறந்தநாளுக்கு முன்பு முடிவு செய்துவிடுவோம். எட்டு ஆண்டுகள் பல பின்னடைவுகளை தாண்டி என்னோடு பயணிக்கின்ற நிர்வாகிகள், தொண்டர்கள் வார்த்தை தான் எனக்கு முக்கியம் அவர்கள் சொல்வது தான் என் முடிவு, அதை நான் செய்வேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *