டிடிவி-க்கு அழுத்தம் கொடுக்கும் பாஜக
பாஜக அழுத்தம் கொடுக்கிறது. மத்திய அரசின் அழுத்தம் என்பது சாதாரணமானது கிடையாது.
தவெக-வுடன் டிடிவி தினகரன் பேச்சு வார்த்தை நடத்துகிறார் என்பதைத் தெரிந்துகொண்டு அவரை டெல்லிக்கு வரவழைத்து அழுத்தம் கொடுத்தார்கள்.
வெளியில் பேசும்போது எனக்கு எந்த அழுத்தமும் இல்லை என்று தான் சொல்கிறார். பிறகு ஏன் அவர் அமித் ஷாவை சந்தித்தார்.

கேள்வி எழுப்பும் அமமுக கட்சியினர்
தற்போது தேர்தலில் எதிரிகள், துரோகிகள் என எதையும் பார்க்கக் கூடாது என்று பேசிக்கொண்டிருக்கிறார்.
ஆனால் எடப்பாடியை எதிர்த்து பேசிவிட்டு இப்போது அவர் இருக்கும் கூட்டணிக்கு சென்றால் நன்றாக இருக்காது என்று டிடிவி கட்சியினர் நினைக்கின்றனர்.
அப்படி எடப்பாடி இருக்கும் கூட்டணியில் இணைந்தால் நம் ஜனங்கள் எப்படி ஓட்டு போடுவார்கள் என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.
மேலும் நம்முடைய ஓட்டை எல்லாம் வாங்கி எடப்பாடி தானே பலமடைவார். அவரை ஏன் அரசியலில் நாம் பலப்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள்? அதனால் டிடிவி தினகரனும் சற்று குழப்பத்தில் தான் இருக்கிறார்.