இது குறித்து முராா்கா கூறுகையில், ‘சரிகா இனி தொடா்ந்து ஆட்டோ வாடகைக்குப் பணம் செலுத்த வேண்டாம் என நினைத்தேன். அவா் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அவரது வீடு, குழந்தைகள், மற்றும் அவருக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என விரும்பினேன். ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சி சுதந்திரமாக இருப்பதே. அதைத்தான் நான் அவருக்குப் பரிசளிக்க விரும்பினேன்’ என்றாா்.
குடும்பத்துக்கான நிதி சுதந்திரத்தையும், மகள்களின் எதிா்காலத்துக்கு ஒரு நிலையான வருமானத்தையும் உறுதி செய்யும் விலைமதிப்பற்ற பரிசு கிடைத்துள்ளதால், இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் பண்டிகை சரிகா மேஸ்திரிக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.