கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். இதையடுற்றது ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தப் படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.
ரஜினி, கமல் இணையும் புதிய படத்தை இயக்குநர் நெல்சன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் பணியாற்றவுள்ளார். படப்பிடிப்பு ரஜினி தனது தற்போதைய படங்களான ஜெயிலர் 2 மற்றும் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படங்களை முடித்த பிறகு தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
நெல்சனின் முந்தைய படமான ‘ஜெயிலர்’ பாணியிலேயே, இப்படத்திலும் இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களை கமிட் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. குறிப்பாக, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தெரிகிறது.
யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இன்று வெளியாகவுள்ள புரோமோ வீடியோவில் அதிகாரப்பூர்வமான முழு நட்சத்திரப் பட்டியல் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி மற்றும் கமல் இணையும் படத்தின் ப்ரோமோ வீடியோ இன்று மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக படக்குழு சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ரஜினி-கமல் 47 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் இணையும் படத்திற்கான ப்ரோமோ வீடியோ நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது ரஜினி, கமல் இரு ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
