ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய வாட்ஸ் ஆப் குழு!

Dinamani2f2025 03 282fc8qxjy6h2ftnieimport201681523originalnow.avif.jpeg
Spread the love

ரயில்களில் பெண்களின்பாதுகாப்புக்காக புதிய வாட்ஸ் ஆப் குழுவை ரயில்வே காவல்துறையினர் அறிமுகம் செய்தனர்.

ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண் மீதான பாலியல் வன்கொடுமை முயற்சி முதல் பெண் காவலரிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களால் ரயிலில் பெண்களின் பாதுகாப்பு குறைந்து வருவது தெளிவாக தெரிகிறது.

இவ்வாறான சம்பவங்களால், ரயிலில் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்படும் காவலர்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரயிலில் பயணிக்கும், குறிப்பாக இரவு நேரங்களில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, புதிய வாட்ஸ் ஆப் குழுவை சென்னை வேப்பேரியில் ரயில்வே காவல்துறை தலைமை இயக்குநர் அறிமுகப்படுத்தினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *