எனக்கும் அதர்வா ப்ரோவுக்கும் சாப்பாட்டுலதான் கனெக்ஷன். என்னை ஸ்வீட் சாப்பிட வச்சிட்டு பிறகு அவர் மட்டும் வொர்க் அவுட் செய்திடுவாரு.
நான் ‘அது இது எது’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது, அதர்வா ப்ரதர் அவருடைய முதல் படத்தின் ப்ரோமோஷனுக்கு முரளி சாரோட வந்திருந்தாரு.
இன்னைக்கு அவருடன் இணைந்து நான் இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு ரொம்பவே ஸ்பெஷலானது. பெர்பார்மன்ஸைத் தாண்டி முயற்சி இருந்தால் தமிழ் ரசிகர்கள் மேல கொண்டு போய் உட்கார வச்சிடுவாங்க.
அப்படி வந்தவன்தான் நான். ஹீரோவாக இத்தனை ஆண்டுகள் நடிச்சப் பிறகு வில்லனாக நடிக்கிற முடிவை எடுப்பது கொஞ்சம் சவாலான விஷயம்.

அவர் இந்தப் படத்துக்குதான் வில்லன். எனக்கு எப்போதுமே நான் காலேஜ்ல பார்த்து வியந்த ஹீரோதான்! இங்க இருக்கிறதுலேயே சீனியர் அவர்தான். அதனால்தான் அவருடைய பெயர் முதல்ல இருக்கும்.
இந்த மாதிரியான படக்குழு, இந்தப் படத்தின் டைட்டில் எல்லாமே கிடைத்திருப்பது அந்த பராசக்தியின் அருள்தான்னு நெனைக்கிறேன். இந்தப் படம் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு பிரச்னையைப் பேசும்.
அதுக்கூடவே காதல், வீரம், பாசம், புரட்சினு எல்லாம் பேசுகிற படமாக இருக்கும். இந்தப் பொங்கல் பண்டிகைக்கு பராசக்தி நல்ல கொண்டாட்டமாக இருக்கும்.” எனப் பேசினார்.