ரஷிய ராணுவத்தில் உள்ள இந்தியர்களை விரைவில் விடுவிக்க புதின் உறுதி: வெளியுறவுத்துறை

Dinamani2f2024 072fc281fb26 F70a 4a23 Abe9 1163679b0bcf2fap07 09 2024 000329b.jpg
Spread the love

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், உக்ரைன் மீதான போர் தொடங்கியதைத் தொடர்ந்து, ரஷிய ராணுவத்தில் அந்நாட்டிலுள்ள இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். போர் நடைபெறும் பகுதிகளில் ரஷிய ராணுவத்துக்கு உதவியாளர்களாக சுமார் 200 இந்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ரஷியாவிலுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்களை அந்நாட்டின் ராணுவத்திலிருந்து விடுவிப்பது தொடர்பாகவும், ரஷியாவிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

உக்ரைனுடனான போரில் ரஷிய ராணுவத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்தியர்களில் இதுவரை நால்வர் கொல்லப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த மாதம் பதிவிட்டிருந்தது. மேலும், இந்தியர்களை அந்நாட்டின் ராணுவத்தில் பணியமர்த்தக் கூடாதென்பதையும் வலியுறுத்தியிருந்தது.

இதுவரை ரஷிய ராணுவத்தில் பணியாற்றும் 10 இந்தியர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மீதமுள்ள அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *