“ரஹ்மான் சார் கம்போஸ் செய்ய வாலி சார் எழுதினாரு!” – ATM இயக்குநர் பரதன் பேட்டி |”Wali sir wrote it for Rahman sir to compose!” – ATM Director Bharathan Interview

Spread the love

இயக்குநர் பரதன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “அழகிய தமிழ் மகன்’.

நம் சினிமா விகடன் ரீவைண்ட் தொடருக்காக இந்த வாரம் ‘அழகிய தமிழ் மகன்’ படத்தின் சுவாரஸ்யக் கதைகளைக் கேட்டறிவதற்கு இயக்குநர் பரதனை சந்தித்தோம்.

அழகிய தமிழ் மகன்

அழகிய தமிழ் மகன்

நம்மிடையே பேசியவர், “படத்தின் டைட்டில் கார்டில் ‘இனிய தளபதி’, ‘இதய தளபதி’, ‘இளைய தளபதி’ எனப் போட்டிருப்பேன். தொடக்கத்திலேயே ஆடியன்ஸை இம்ப்ரெஸ் பண்ணனும்ங்கிறதுதான் இதனுடைய ஐடியா !

விஜய் சாருடைய குணாதிசயங்களுக்கேத்த மாதிரி அந்த டைட்டிலை போட்டோம். அதைப் பார்த்து அவரும் ஹாப்பி ஆனார். அவருக்கு 2007-ம் ஆண்டில்தான் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுச்சு.

சரியாகச் சொல்லப்போனால், எங்களுடைய படப்பிடிப்பு நடந்திட்டு இருக்கும்போதுதான் டாக்டர் பட்டம் கொடுத்தாங்க. டாக்டர் பட்டம் வாங்கிய பிறகு வெளிவருகிற முதல் படம் இது என்பதால, டைட்டில்ல டாக்டர்னு போடலாம்னு ப்ளான் பண்ணினோம்.

இதை நானே அவர்கிட்ட ‘யூஸ் பண்ணிக்கலாம். நல்லா இருக்கும்’னு சொன்னேன். அவரும் அதுக்கு ஓகே சொல்லிட்டாரு.” என்றவர், “‘கில்லி’ படம் முடிவு பெறவிருந்த சமயத்துல நான் விஜய் சாருக்கு ஒரு கதை சொன்னேன். அந்தக் கதை அவருக்குப் பிடிச்சதும், அதை அப்படியே எஸ்.ஏ.சி சார்கிட்ட சொல்ல சொன்னாங்க.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *