அவள் விகடன் சக்தி மசாலாவுடன் இணைந்து வழங்கும் `சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3’ விழுப்புரம் ஹமித்ரா மஹாலில் பிரம்மாண்டமாக தொடங்கியது.
`உங்கள் சமையல் திறமைக்கான சவால் மேடை!’ என்ற தலைப்பில் புதுச்சேரி, வேலூர், சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, சென்னை தெற்கு, சென்னை வடக்கு உள்ளிட்ட 13 பகுதிகளில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று, சென்னையில் நடைபெற இருக்கிறது.
விழுப்புரத்தில் இன்று தொடங்கியிருக்கும் நிகழ்ச்சியில் விழுப்புரம், அரசூர், கோலியனூர், வளவனூர், செஞ்சி, உளுந்தூர்பேட்டை பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மொத்தம் இரண்டு சுற்றுகளாக நடைபெறும் இந்தப்போட்டியின் முதல் சுற்றில், போட்டியாளர்கள் வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வந்த உணவை காட்சிப்படுத்துவார்கள்.
போட்டியின் நடுவர் பிரபல யுடியூபர் மற்றும் சமையல்கலை வல்லுநரான செஃப் தீனா, அவர்களில் அவர்களில் சிறப்பாக பங்காற்றியவர்ளை தேர்வு செய்வார். அவர்கள் அங்கேயே நடைபெறும் `லைவ் கிச்சன் சமையல்’ பிரிவுக்கு அனுப்பப்படுவார்கள்.