ராகுல் ராசியில்லாதவர்: பாஜக

Dinamani2f2024 09 122fy888htq82fwhatsapp20image202024 09 1120at2012.59.4820pm.jpeg
Spread the love

இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி பேசியதை பாஜக அமைச்சர் மக்களவையில் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அந்நாட்டு தலைநகா் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவா்களுடன் கலந்துரையாடினார். அப்போது இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் பேசிய பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, அமெரிக்காவில் ராகுல் பேசியதை விமர்சித்துள்ளார்.

மக்களவையில் சம்பித் பேசியதாவது “அமெரிக்காவில் ராகுல் முன்வைத்த இந்தியா குறித்த கருத்துகளின் பிம்பத்தால் ஒட்டுமொத்த நாடும் புண்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற அவருடைய ஆணவம் மக்களவையிலும், அமெரிக்காவில் அவரது செய்த முட்டாள்தனத்திலும் பிரதிபலிக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *