வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, இன்று வி.கே.சசிகலா சந்தித்திருந்தார்.
இந்நிலையில் ராமதாஸ் தலைமையிலான பாமக-வும், சசிகலாவின் அ.பு.த.ம.மு.க-வும் தேர்தல் கூட்டணியை அமைத்திருக்கின்றன.
கூட்டணி உடன்பாடு கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராமதாஸ், “தமிழக மக்களின் நன்மைக்காக அமைக்கப்பட்ட கூட்டணி இது.

எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கும் கட்சிகள் எங்களுடன் கூட்டணி அமைக்கலாம்.
நாங்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். சில நேரங்களில் காலதாமதங்கள் ஆவது உண்டு.
அந்த வகையில் எங்கள் கூட்டணி தொடர்பான அறிவிப்பில் காலதாமதம் ஆனது” என்று தெரிவித்திருக்கிறார்.