ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கோகுல் நகரைச் சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்த மாணவர் ஒருவர் தன்னை காதலிக்கும் படி மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
மாணவர் தன்னை காதலிக்க சொல்லி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததை மாணவி தன்னுடைய தாயாரிடம் கூறியுள்ளார். இது குறித்து மாணவியின் தாயார் பள்ளியில் புகார் செய்ததை தொடர்ந்து அந்த மாணவனை பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர். பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட போதிலும், மாணவி பள்ளிக்கு வரும்போதும் போகும்போதும் வீதியில் செல்லும்போது இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து வந்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் தன்னை காதலிக்கும்படி தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது..
