இதன் பின்னரும் பாண்டியுடன் சேர்ந்து வாழ முடியாத சோகத்தில் மனமுடைந்து இருந்து வந்துள்ளார் சசிகலா. இதனால் கடந்த சனிக்கிழமை சசிகலா தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உச்சிப்புளி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கிருஷ்ணகிரிக்கு கார் ஓட்டிச் சென்றிருந்த பாண்டி, சசிகலா தற்கொலை செய்து கொண்ட செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்தச் சோகத்தில் இருந்து மீள முடியாத பாண்டி கிருஷ்ணகிரியிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குடும்பத்தினரின் எதிர்ப்பினால் நிறைவேறாமல் போன காதலால் இரு உயிர்கள் பலியான சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.