சீசர் பெலி என்னும் கட்டிடக் கலைஞரால் 1998-ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கட்டிடம் முழுவதும் அலுவலகப் பயன்பாட்டுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் துருப் பிடிக்காத உருக்குகளையும், கண்ணாடிகளையும் பயன்படுத்தி இந்த 88 மாடிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

பெட்ரோனாஸ் கோபுரம், 1242 அடிகள் உயரத்தில் கட்டிட உச்சியைக் கொண்டு இருந்தாலும், அதன் உச்சியில் அமைந்துள்ள கூரிய அமைப்புகள் 1483 அடி உயரத்தைத் தொடுகின்றன. மலேசியாவின் இஸ்லாமிய பண்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும், இஸ்லாமிய கலையில் காணப்படும் வடிவ அமைப்பைக் கொண்டதாகவும் இந்தக் கட்டிடம் அமைந்து உள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரத்திற்கும் மலேசிய நாட்டிற்கும் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நிலையான தொடர்பு இருந்து வருகிறது. இத்தகைய வரலாற்று உண்மையைப் பறைசாட்டும் வகையில் மலேசியாவின் இந்த இரட்டை கோபுரம் ( petronas twin Tower) கேக்கினை 50 கிலோ சர்க்கரை மற்றும் 200 முட்டைகளைப் பயன்படுத்தி 7 அடி உயரத்தில் உருவாக்கியுள்ளனர்.
ராமநாதபுரம் பாரதி நகர் ஐஸ்வர்யா பேக்கரி நிறுவனத்தின் முன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த மாடல் கேக் வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் கவர்ந்துள்ளது.