இதுகுறித்து பேராசிரியா் சுப. முத்தழகன் கூறியதாவது: ராயவரத்தில் இருந்து மொனசந்தை செல்லும் சாலையில், ஆலங்குடி கிராமத்துக்கு வடக்கே ஆலங்குடி பெரியகண்மாய் அமைந்துள்ளது. அவ்விடத்தில் மேற்பரப்பு களஆய்வு மேற்கொண்டதில் உருகிய நிலையில் தாதுக் கற்கள், இரும்பு கசடுகள், சுடுமண் துருத்தி குழாய்களின் உடைந்த பாகங்கள், பழைமையான பானை ஓடுகள் போன்றவை கிடைக்கப்பெற்றன.
ராயவரம் அருகே பழைமையான இரும்பு உருக்கு உலைகள் கண்டெடுப்பு
