எதிர்வரும் தொடரில் மஞ்சள் ஜெர்ஸியில் தோனி விளையாடுவதே அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்திருக்கிறார்.
2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் சிஎஸ்கே அணி மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்குகிறது.

இந்நிலையில் சிஎஸ்கே குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ராபின் உத்தப்பா, ” கேப்டன் பொறுப்பை சஞ்சு சாம்சனிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொடுக்காது என்று நான் நினைக்கிறன்.
தோனியின் நிழலில் இருந்து விலகி ருதுராஜ் ஒரு முழுமையான கேப்டனாக உருவெடுக்க இன்னும் சில ஆண்டுகள் அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.