ரூபாய் சரிவை RBI ஏன் தடுக்க முடியவில்லை? முன்னாள் வங்கியாளர் விளக்கம்|Rupee Crash: Why RBI Has Failed to Stop It

Spread the love

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஒரு வழிதான் உள்ளது.

அது தங்களிடம் இருக்கும் அமெரிக்க டாலர்களைச் சந்தையில் விற்பது.

இந்திய ரிசர்வ் வங்கி அமெரிக்க டாலரை விற்கும்போது, சந்தையில் அதன் சப்ளை அதிகமாக இருக்கும்.

அதனால், அதன் தேவை குறையும்… அதன் மதிப்பும் குறையும்.

இந்திய ரிசர்வ் வங்கி இந்தச் செயலைச் செய்து இந்திய ரூபாய் மதிப்பு வீழ்வதைத் தடுக்க எவ்வளவோ செய்துவிட்டது. ஆனால், எதுவும் கைக்கொடுக்கவில்லை.

ஆக, இந்திய ரிசர்வ் வங்கி தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டது.

இதே நேரத்தில், பெரியளவில் இந்திய ரிசர்வ் வங்கியால் அமெரிக்க டாலர்களைச் சந்தையில் இறக்கிவிட முடியாது. காரணம், அவை வர்த்தகத்திற்கு மிகத் தேவை.

உலக அளவில் இப்போது இந்திய ரூபாய் மட்டும் சரியவில்லை. ஈரான் போரால் பல நாடுகளின் நாணயங்கள் இந்த இறக்கத்தைச் சந்தித்து வருகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி

விளைவுகள்…

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்வது ஏற்றுமதியாளர்களுக்கு ப்ளஸ். ஏனெனில், அவர்களுக்கு வரவேண்டிய பேமென்ட் டாலர்களில் வரும். அதை இங்கே இந்திய ரூபாயாக மாற்றும் போது, அவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும்.

ஆனால், இறக்குமதியாளர்களுக்கோ வேறு கதை. அவர்கள் அதிக தொகையைக் கொடுத்து அமெரிக்க டாலர்கள் வாங்கி இறக்குமதி செய்ய வேண்டும்.

இதனால், சத்தமில்லாமல், இந்தியாவில் பணவீக்கம், வேலை இழப்பு ஆகியவை நடக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *