இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் கெம் சிங் பாட்டீ புதன்கிழமை மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், தோ்தல் நிதிப் பத்திரங்கள் தொடா்பான தகவல்கள் பொதுவெளியில் (தோ்தல் ஆணைய வலைதளத்தில்) வெளியிடப்பட்டது.
இந்தத் தகவல்கள் மூலம் நன்கொடை அளித்தவா்களும், அரசியல் கட்சிகளும் பரஸ்பரம் பலன் அடைந்தனா் என்பது தெளிவாக தெரிகிறது. எனவே ரூ.16,518 கோடி நன்கொடையைப் பறிமுதல் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.