ரூ.2 லட்சத்துக்கு போலீஸ் வேலை: ஐபிஎஸ் சீருடையில் சுற்றிய சிறுவன் கைது!

Dinamani2fimport2f20202f82f42foriginal2farest.jpg
Spread the love

ரூ.2 லட்சம் கொடுத்தால் போலீஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய நபரிடம், சமோசா விற்றப் பணத்தைக் கொடுத்து ஏமாந்த சிறுவன், ஐபிஎஸ் சீருடையில் கையில் துப்பாக்கியுடன் சுற்றியதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சமோசா போன்ற தின்பண்டங்களை விற்பனை செய்து வந்த சிறுவன், தான் விரைவில் ஐபிஎஸ் அதிகாரி ஆகப்போகிறேன் என்று சொல்லி வந்ததில் யாரும் ஆச்சரியப்படவில்லை. ஏதே விளையாட்டாக சொல்கிறார் என்றுதான் நினைத்திருப்பார்கள்.

ஆனால், பிகார் மாநிலம் ஜமூய் மாவட்டத்தில், உள்ள சிறிய கிராமத்தில், 18 வயதே அந்த அந்த சிறுவன், ஐபிஎஸ் அதிகாரியின் உடையில், கையில் துப்பாக்கியுடன் ரோந்து வந்தபோது பலரும் மிரண்டேவிட்டிருப்பார்கள். சிலர் விவரம் அறிந்து உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

காவல்துறையினர் அவரைக் கைது செய்த போதுகூட, சிறுவனுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *