ரூ. 5.24 கோடி மோசடி: தயாரிப்பாளர் ரவீந்தருக்கு மும்பை போலீஸ் சம்மன்!

dinamani2F2025 07
Spread the love

மும்பையில் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ. 5.24 கோடி மோசடி செய்த வழக்கில் படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு மும்பை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த அஜய் ஜெகதீஷ் என்பவரிடம் ஆன்லைன் வர்க்கத்தில் அதிக லாபம் ஈட்டி தருவதாகக் கூறி ரோகன் மேனன் என்பவர் மோசடி செய்ததாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து மோசடி செய்யப்பட்டது உறுதியாகிய நிலையில், ரோகன் மேனன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, ரோகன் மேனனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், ஆன்லைன் வர்க்க மோசடி விவகாரத்தில் படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது.

இது தொடர்பாக, படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் கூட்டாளிகள் மணிகண்டன் மற்றும் பாண்டி ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

தற்போது, ரவீந்திர சந்திரசேகரனை கைது செய்ய போலீஸார் முயற்சி எடுத்தபோது, அவரது உடல்நிலை காரணமாக கைது செய்யாமல், சம்மன் வழங்கி விசாரணைக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதே வழக்கில் தொடர்புடைய மற்றவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!

Mumbai Police has summoned film producer Ravindhar Chandrasekaran in a case of fraud of Rs 5.24 crore on the pretext of high profits in online trading in Mumbai.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *