எப்படி நடக்கிறது இந்த மோசடி?
உங்களுடைய மொபைல் எண்ணுக்கு விடியோ காலில் அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில், மோசடி கும்பல் தங்களை சிபிஐ / வருமானவரித் துறை/ காவல்துறை அதிகாரிகள் என்று கூறி, நீங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவோ குற்றம் செய்திருப்பதாகவோ உங்களை நம்பும்படி செய்து பின்னர் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்கிறோம் என்று ஆன்லைனிலே வைத்திருக்கின்றனர்.
பல மணி நேரம், பல நாள்கள்கூட இப்படியே இருக்க வைக்கின்றனர். இதன் மூலமாக பலரும் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.
எனவே, இதுபோன்ற விடியோ அழைப்புகள் வந்தால் சற்றும் யோசிக்காமல் அழைப்பைத் துண்டித்துவிட்டு உடனடியாக காவல்துறையில் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது.
டிஜிட்டல் அரெஸ்ட் அல்லது இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.