`மான் கராத்தே”, `கெத்து’ போன்ற திரைப்படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `ரெட்ட தல’.
அருண் விஜய், சித்தி இத்னானி நடித்திருக்கும் இத்திரைப்படம் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (டிச.15) நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய அருண் விஜய், ” `ரெட்ட தல’ படம் ஒன்றரை வருடத்திற்கான உழைப்பு.
இந்தப் படக்குழுவோடு பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘வணங்கான்’ படத்திற்குப் பிறகு வேறு மாதிரியான ஒரு கதைக்களத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அப்போது தான் இயக்குநர் இந்தக் கதையை சொன்னார். எனக்கு கேட்டவுடனே பிடித்துவிட்டது.