கௌதம் கம்பீருக்கும் ரோஹித் சர்மாவுக்கும் பிரச்னையா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணிக்குள் நடக்கும் நிகழ்வுகள் பல்வேறு கேள்விகளை எழச் செய்கிறது.
சிட்னி மைதானத்தில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் அணியின் துணைக் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சில நிமிடங்களுக்குப் பிறகு அவர்களுடன் இணைந்த ரோஹித் சர்மா அதிகமாக பேசவில்லை. குறிப்பாக, கௌதம் கம்பீருடன் அவர் பேசவில்லை.
பொதுவாக போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாளில் அணியின் கேப்டன் பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம். ஆனால், சிட்னி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ரோஹித் சர்மா பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. மாறாக, கௌதம் கம்பீர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். நாளை நடைபெறும் போட்டியில் ரோஹித் சர்மா அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு கௌதம் கம்பீர் பதிலளிக்க மறுத்துள்ளார்.