`ரௌடி தட்டாஞ்சாவடி செந்தில், வீட்டுக்கு வந்தவரை கொலை செய்து வீசியவர்!’ – பாஜக எம்.எல்.ஏ பகீர் புகார்

Spread the love

தட்டாஞ்சாவடி செந்தில் என்று சொல்லிக் கொள்ளும் இவர், தட்டாஞ்சாவடியில் நின்றால் விலை போகமாட்டாரா ? தட்டாஞ்சாவடி செந்தில் எவ்வளவு பெரிய கொலைக் குற்றவாளி, கட்டப்பஞ்சாயத்து செய்பவர் என்பது உலகத்துக்கே தெரியும். அதனால் அங்கு விலைபோக முடியாது என்பதால் காலாப்பட்டு தொகுதிக்கு வருகிறார். அதேபோல நான் தேர்தலுக்கு பயந்து ஜோசப்பையும், சந்திரசேகரையும் கொலை செய்துவிட்டதாக சொல்கிறார். 15.02.2017 அன்று நடைபெற்ற மடுவுப்பேட் முரளி கொலை வழக்கில், குற்றவாளியாக சிறையில் இருந்தவர் தட்டாஞ்சாவடி செந்தில்.

புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம்

புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம்

ஜோசப் கொலை செய்யப்பட்டது 30.07.2018. அப்போது இவர் சிறையில் இருந்தார். 24.09.2019 அன்று சந்திரசேகர் கொலை செய்யப்படுகிறார். அப்போதும் இவர் சிறையில் இருந்தார். அதாவது மூன்று ஆண்டுகள் கொலை வழக்கிற்காக சிறையில் இருந்தார்.

ஜோசப், சந்திரசேகர் உயிருடன் இருக்கும்போதே, 2011 தேர்தலில் 6,800 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் ஷாஜகானை தோற்கடித்தேன். அப்படி இருக்கும்போது நான் யாருக்காக அவர்கள் இருவரையும் கொலை செய்ய வேண்டும் ?

இவர் இருபதுக்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இருக்கும் குற்றவாளி. ஆனால் அவரைப் போல என் மீது ஏதேனும் வழக்கு இருந்தால் நான் அரசியலையே விட்டு விடுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *