லசித் மாலிங்க இன்றி இலங்கை அணியால் சமாளிக்க முடியுமா?

Spread the love

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க கணுக்காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

இதனால் சுமார் குறைந்தது 4 மாதகாலத்திற்கு விளையாட்டிலிருந்து ஓய்வுபெற வேண்டிய நிலைக்கு லசித் மாலிங்க தள்ளப்பட்டுள்ளார்.

2004-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் உலகுக்கு அறிமுகமான லசித் மாலிங்க, முழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக 2011-ம் ஆண்டில் டெஸ்ட் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.

ஆனாலும், ஒருநாள் மற்றும் 20-ஓவர் போட்டிகளில் பெரும்பாலும் லசித் மாலிங்கவையே இலங்கை அணி நம்பியிருக்கின்றது.

போட்டிகளின் இறுதிக் கட்டங்களில் ஓட்டங்களை குறைவாகக் கொடுத்து எதிரணியைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் வல்லவர் என்று லசித் மாலிங்க வர்ணிக்கப்படுகின்றார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும், பின்னர் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கவுள்ள நியுசிலாந்துக்கு எதிரான தொடரிலும் லசித் மாலிங்க பங்கேற்க முடியாத சூழ்நிலையே நிலவுகின்றது.

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கை அணி தயாராகிவருகின்றது.

இந்த சூழ்நிலையில், லசித் மாலிங்க உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தயாராக முடியுமா என்ற சந்தேகம் உள்ளதாக விளையாட்டு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை அணியில் லசித் மாலிங்கவின் பங்கு பற்றியும் அவருக்கு மாற்றீடாக இலங்கை அணித் தெரிவாளர்களுக்கு உள்ள தெரிவுகள் என்ன என்பது பற்றியும் இலங்கையின் சூரியன் எப்எம் வானொலியின் விளையாட்டுத்துறை செய்தியாளர் தில்லையம்பலம் தரணிதரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தக் கருத்துக்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *