லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு: அண்ணா பல்கலை. அதிகாரிகள் 10 பேரை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை | Anna University suspends 10 officials

Spread the love

சென்னை: தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு முறை​கே​டாக அங்​கீ​காரம் வழங்​கப்​பட்​டது தொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்கு பதிவு செய்​துள்ள நிலை​யில், அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் பதி​வாளர் உள்​ளிட்ட 10 அதி​காரி​கள் விரை​வில் இடைநீக்​கம் செய்​யப்பட உள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

மாநில அரசின் தொழில்​நுட்ப பல்​கலைக்​கழக​மான அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் இணைப்பு அங்​கீ​காரம் பெற்று தமிழகத்​தில் 470-க்​கும் மேற்​பட்ட தனி​யார் சுயநிதி பொறி​யியல் கல்​லூரி​கள் இயங்கி வரு​கின்​றன.

இந்த நிலை​யில், தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு விதி​முறை​களை மீறி முறை​கே​டாக இணைப்பு அங்​கீ​காரம் வழங்கப்பட்டது தொடர்​பாக அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் பதி​வாளர் ஜெ.பிர​காஷ், இணைப்பு அங்​கீ​காரப் பிரிவு துணை இயக்​குநர் இளை​யபெரு​மாள் உட்பட 10 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்கு பதிவு செய்​துள்​ளது.

பொது​வாக, பதி​வாளர், துணை இயக்​குநர் உள்​ளிட்ட நிர்​வாகப் பொறுப்​பு​களில் இருப்​பவர்​கள் மூத்த பேராசிரியர்​களாக இருப்​பார்​கள். அரசு ஊழியர் நடத்தை விதி​முறை​களின்​படி, ஓர் அரசு ஊழியர் மீது குற்​ற​வியல் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டால், அவர் உடனடி​யாக பணி​யில் இருந்து இடைநீக்​கம் செய்யப்படுவார்.

அந்த வகை​யில், தற்​போது அண்ணா பல்​கலைக்​கழக அதி​காரி​கள் 10 பேர் மீது லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், அவர்​களை இடைநீக்​கம் செய்ய பல்​கலைக்​கழக நிர்​வாகம் முடிவு செய்​துள்​ளது.

அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் நீண்​ட​கால​மாக துணைவேந்​தர் பதவி காலி​யாக இருப்​ப​தால் உயர்​கல்​வித் துறை செயலர், தொழில்​நுட்​பக் கல்வி ஆணை​யர் உள்​ளிட்​டோர் அடங்​கிய ஒருங்​கிணைப்​புக் குழு​தான் பல்​கலைக்​கழக நிர்​வாகப் பணி​களை கவனித்து வரு​கிறது. இந்த குழு மூல​மாக 10 அதி​காரி​கள் இடைநீக்கம் செய்யப்பட இருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

அந்த 10 பேரில் ஒரு​வ​ரான முன்​னாள் பதி​வாளர் ஜெ.பிர​காஷ், தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தில் ஆளுநர் மூல​மாக சிண்​டிகேட் உறுப்​பின​ராக நியமிக்​கப்​பட்​ட​வர். அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ள​தால், சிண்​டிகேட் உறுப்​பினர் பத​வி​யில் இருந்து அவரை நீக்க ஆளுநர் ஆர்​.என்​.ரவி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்​ள​தாகவும் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *