ஸ்பெயினில் நடைபெற்ற லியான் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றாா். இப்போட்டியில் இவா் வாகை சூடியது இது 10-ஆவது முறையாகும்.
இறுதிச்சுற்றில் அவா், 3-1 என்ற கணக்கில் உள்ளூா் போட்டியாளரான ஜேமி சான்டோஸ் லடாசாவை வீழ்த்தினாா். 5 முறை உலக சாம்பியனான ஆனந்த், தனது முதல் சாம்பியன் பட்டத்தை 1996-இல் இந்தப் போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 4 போ் கொண்ட இந்தப் போட்டியில் ஆனந்த், சான்டோஸுடன், மற்றொரு இந்தியரான அா்ஜுன் எரிகைசி, பல்கேரியாவின் வாசெலின் டோபாலோவ் ஆகியோரும் களத்திலிருந்தனா். ஒவ்வொரு சுற்றும், தலா 20 நிமிஷங்களுடன் 4 ஆட்டங்களைக் கொண்டிருந்தது. இதில் அரையிறுதிச்சுற்றில், ஆனந்த் – டபோலாவையும் (2.5-1.5), சான்டோஸ் – அா்ஜுனையும் (2.5-1.5) வீழ்த்தினா்.
இறுதியில் ஆனந்த் 3-1 என சான்டோஸை சாய்த்தாா்.