அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘அறிக்கையில் தங்களின் அதிருப்தி கருத்துகள் முழுமையாக இடம்பெறவில்லை என சில எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். அவா்களின் கருத்துகள் எதுவாக இருந்தாலும், அவற்றை அறிக்கையில் இணைக்க பாஜகவுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. நாடாளுமன்ற நடைமுறைகளின்கீழ், மக்களவைத் தலைவா் முடிவெடுக்க கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா். அதேநேரம், ஜகதாம்பிகா பாலை கண்டித்து, அவையில் இருந்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனா்.
வக்ஃப் மசோதா அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்: எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பால் ‘அதிருப்தி’ கருத்துகள் மீண்டும் சோ்ப்பு
