அதைத் தொடர்ந்து 1991-ல், கலீதா ஜியா தேர்தலில் பங்குகொண்டார். மக்கள் வாக்கெடுப்பின் மூலம் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றார்.
இவரின் ஆட்சியின்போதுதான் நாடாளுமன்ற அரசு முறை, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலைக் கண்காணிப்பதற்கானப் பொறுப்பாளர் அரசு முறை என இரண்டு அரசு முறையை அறிமுகப்படுத்தினார்.
முக்கிய சீர்திருத்தங்கள்;
கலிதா ஜியாவின் முதல் ஆட்சி சில முக்கியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. அவற்றில் மதிப்புக்கூட்டு வரி (VAT) அறிமுகம், 1991-ல் வங்கி நிறுவனச் சட்டம், 1993-ல் நிதி நிறுவனங்கள் சட்டம், தனியார்மயமாக்கல் வாரியம் ஆகியவை அடங்கும். வங்கதேசத்தில் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் கூடுதல் அக்கரைக் கொண்டு தீவிரமாகப் பணியாற்றினார். அதற்காகவே அவர் நினைவுகூரப்படுகிறார்.
கலிதா ஜியாவின் இரண்டாவது பதவிக்காலம் சில வாரங்களுக்கு மட்டுமே நீடித்தது. மீண்டும் ஆட்சிக்கு வரும் நோக்கில், பி.என்.பி கட்சி 1999-ல் ஜாதியா கட்சி, ஜமாத்-இ-இஸ்லாமி, இஸ்லாமி ஒய்க்யா ஜோட் ஆகிய நான்கு கட்சிக் கூட்டணியுடன் எதிர்க்கட்சிக் கூட்டணியை அமைத்தார்.
ஆளும் அவாமி லீக்கிற்கு எதிராகப் பல போராட்டத் திட்டங்களைத் தொடங்கியது. ஊழல் மற்றும் பயங்கரவாதத்தை ஒழிப்பதாக உறுதியளித்து 2001-ல் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தார்.