அண்டை நாடான வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால், பாதுகாப்பு கருதி இந்தியர்கள் வங்கதேசத்திற்கு பயணிக்க வேண்டாமென வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசத்திலுள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், வெளியே வர வேண்டாமெனவும், தலைநகர் தாக்காவிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ளவும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். 8801958383679, 8801958383680, 8801937400591 ஆகிய தொலைபேசி உதவி எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்திற்கு இந்தியர்கள் பயணிக்க வேண்டாம்! உதவி எண்கள் அறிவிப்பு
