> நீண்ட காலமாக ஒரே பிரதமர் நாட்டை ஆள்வதற்கு செக் வைக்கும் விதமாக, இனி ஒருவர் இரண்டு முறை மட்டுமே பிரதமர் ஆகலாம்.
> புதிதாக 100 மேல் சபை சீட்டுகள் உருவாக்கப்படும். இந்தச் சீட்டுகள் தேசிய வாக்குகளின் பங்கைப் பொறுத்து பிரித்துக்கொடுக்கப்படும்.
> பிரதமரிடம் ஒட்டுமொத்த அதிகாரமும் குவிவதைத் தடுக்க, ஜனாதிபதியின் அதிகாரம் வலுப்படுத்தப்பட உள்ளது.
> நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அரசு சார்ந்த அமைப்புகளில் அரசியல் செல்வாக்கு குறைக்கப்பட உள்ளது.
> எதிர்க்கட்சிகளுக்கு உரிய அதிகாரம் கொடுத்தல் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு துணை சபா நாயகர் பதவி வழங்கப்படும்.
> நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட உள்ளது.