வங்கதேச பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்! இறுதிக்குச் செல்ல 136 ரன்கள் இலக்கு!

Spread the love

அதன்படி, ஆட்டம் துவங்கியது முதலே பாகிஸ்தான் வீரர்களுக்கு வங்கதேச பந்துவீச்சாளர்கள் அழுத்தம் கொடுத்தனர். சஹிதாப் ஃபர்கான் 4 ரன்களிலும், ஃபக்கார் ஸமான் 13 ரன்களிலும், நட்சத்திர ஆட்டக்காரர் சைம் அயூப் இந்தத் தொடரில் 4-வது முறையாக ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி வெளியேறினர்.

அடுத்துவந்த கேப்டன் சல்மான் 19 ரன்களும், கடந்த போட்டியின் ஆட்டநாயகன் ஹுசைன் தலத் 3 ரன்களிலும், ஷாகீன் 19 ரன்களிலும், ஃபக்கீம் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் முகமது நவாஸ் மட்டும் சிறிது நேரம் தாக்குப் பிடித்து 1 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணியால் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

வங்கதேச அணித் தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளும், மெஹதி ஹசன், ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *