வங்கி அதிகாரிகள் ​முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை | Chennai Police Commissioner warns of strict action if bank officials are complicit in fraud

Spread the love

சென்னை: போலி ஆவணங்​கள் மூலம் நிலம் அபகரிப்​பு, வங்​கிக் கடன் பெற்று மோசடி, போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி உட்பட பல்​வேறு வகை​யான மோசடிகள் தொடர்​பாக சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் தின​மும் புகார்​கள் அளிக்​கப்​பட்டு வரு​கின்​றன. இது தொடர்​பாக மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இதில் தொடர்​புடைய மோசடிக்​காரர்​கள் அடுத்​தடுத்து கைது செய்​யப்​படு​கின்​றனர். தொடர் விசா​ரணை​யில் பெரும்​பாலான மோசடி வழக்​கு​களின் பின்​னணி​யில் ஏதாவது ஒரு வங்கி ஊழியர் அல்​லது வங்கி அதி​காரி இருப்​பது போலீ​ஸாருக்கு தெரிய​வந்​தது. முன்பு அவர்​களை போலீ​ஸார் எச்​சரித்து வழக்​குப் பதி​யாமல் அனுப்​பி​விடு​வார்​கள்.

ஆனால், அவர்​கள் மீதான பிடியை சென்னை போலீ​ஸார் தற்​போது இறுக்​கி​யுள்​ளனர். குறிப்​பாக மோசடிக்கு உடந்​தை​யாக இருந்​த​தாக இந்த ஆண்​டில் மட்​டும் 67 வங்கி ஊழியர்​கள் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இவர்​களில் 49 வங்கி அதி​காரி​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். மீத​முள்ள 18 அதி​காரி​களை போலீ​ஸார் தொடர்ந்து தேடி வரு​கின்​றனர்.

இது ஒரு​புறம் இருக்க முறை​கேட்​டில் ஈடு​பட்​டாலோ, மோசடிக்கு உடந்​தை​யாக இருந்​தாலோ சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது பாரபட்​சமின்றி கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். வங்கி ஊழியர் மற்​றும் அதி​காரி​கள் என்​றாலும் பாரபட்​சம் காட்​டப்​ப​டாது என காவல் ஆணை​யர்​ அருண்​ எச்​சரித்​துள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *