வடகொரியா: அதிகாரத்தின் அடுத்த வாரிசு; தலைமைப் பொறுப்புக்கு மகளை முன்னிறுத்தும் கிம் ஜாங் உன்!

Spread the love

கடந்த சில மாதங்களாகவே, கிம் ஜாங் உன் தனது மகளை ராணுவ அணிவகுப்புகள், ஏவுகணை சோதனைகள் மற்றும் முக்கிய அரசு விழாக்களுக்குத் தொடர்ந்து அழைத்துச் செல்கிறார். ஆரம்பத்தில் ஒரு தந்தையின் பாசமாகப் பார்க்கப்பட்ட இந்த விஷயம், தற்போது வடகொரியாவின் அதிகார மாற்றத்திற்கான அறிகுறியாக மாறியுள்ளது.

தென் கொரியாவின் தேசிய உளவு அமைப்பு, வடகொரியாவில் கிம் ஜு-ஏ-வுக்கு அளிக்கப்படும் மரியாதை மற்றும் அவர் பொதுவெளியில் தோன்றும் விதம் ஆகியவை, அவரே அடுத்த தலைவர் என்பதை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அரசு ஊடகங்கள் அவரை “வழிகாட்டும் நபர்” (Great Person of Guidance) என்று அழைக்கத் தொடங்கியுள்ளன. இது அந்த நாட்டின் உச்சகட்ட தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் மிக உயரிய அடைமொழியாகும்.

வடகொரிய வரலாற்றிலேயே ஒரு பெண் தலைவராக உருவெடுப்பது என்பது மிகப்பெரிய மாற்றமாகும். இதுவரை கிம் குடும்பத்தின் ஆண்கள் மட்டுமே நாட்டைத் தலைமை தாங்கி வந்துள்ளனர். இந்தச் சூழலில், தனது மகளுக்குச் சிறு வயதிலேயே ராணுவப் பயிற்சி மற்றும் அரசியல் விழிப்புணர்வை கிம் ஜாங் உன் வழங்கி வருவதாகத் தெரிகிறது. இது அந்த நாட்டு மக்களிடையேயும், சர்வதேச அரசியலிலும் ஒருவிதமான ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *