சென்னை கொளத்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பல்வேறு இடங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர். முதல் சுற்றில், போட்டியாளர்கள் காட்சிப்படுத்திய உணவுகளை சுவை பார்த்து, அதன் பதம், சுவை, ஆரோக்கிய பயன்கள் போன்றவற்றின் அடிப்படையில் சிறந்த பத்து உணவுகளைத் தேர்வு செய்தார் நடுவர் செஃப் தீனா.

அதன் அடிப்படையில், நிஷா, மகாலட்சுமி பாலாஜி, பானுமதி, மகாலட்சுமி ஶ்ரீதர், தேவிகா, ஆயிஷா ராயிஸ், தனலட்சுமி, குணசுந்தரி, மோகனப்பிரியா ஆகிய பத்து பேர் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டாம் சுற்றான நேரடி சமையல் சுற்றில், ஒரு மணி நேரத்துக்குள் ஒரு ஸ்டார்ட்டர் அல்லது கிரேவி, ஒரு மெயின் டிஷ், ஒரு டெசர்ட் சமைக்க வேண்டும்.