இந்தியாவின் தேசியப் பாடலான `வந்தே மாதரம்” பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நேற்று (டிச.8) சிறப்பு விவாதம் நடைபெற்றது.
பிரதமர் மோடி, மக்களவையில் தனது உரை மூலம் இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.

மோடி தனது உரையில், மறைந்த முன்னாள் பிரதமர் நேருவையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
காங்கிரஸ் உறுப்பினர்களும் ‘வந்தே மாதரம்’ தொடர்பான மோடியின் பேச்சுக்கு பதில் அளித்து வந்தனர்.