வன்னியருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி டிசம்பர் முதல் வாரத்தில் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு | Ramadoss announced protest in the first week of dec demanding 10.5% reservation for Vanniyar

1377667
Spread the love

விழுப்புரம்: வன்​னியர் சங்க நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் நேற்று நடை​பெற்​றது. பின்னர் பாமக நிறு​வனர் ராம​தாஸ், செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வன்​னியர்​களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்​கீடு வழங்​கக் கோரி டிசம்​பர் முதல் வாரத்​தில் வன்​னியர் சங்​கம் சார்​பில் மாவட்​ட தலை நகரங்​களில் போராட்​டம் நடத்​தப்​படும். இதில் 30 வயதுக்கு கீழே உள்ள மாணவ, மாணவி​கள், இளைஞர்​கள் பங்​கேற்​பார்​கள்.

30 வயதுக்கு மேலே உள்​ளவர்​கள் போராட்​டம் நடத்த உதவி செய்​வார்​கள். போராட்​டத்தை வடிவ​மைக்க கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி தலை​மை​யில் 7 பேர் அடங்கிய குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. நாங்​கள்​தான் பாமக என்று ஒரு கும்​பல் கூறிக் கொண்​டிருக்​கிறது. அவர்​களது வேஷம் கலைக்​கப்​படும். போலி முகவரி கொடுத்து தேர்​தல் ஆணை​யத்​தின் கடிதத்தை பெற்​றுள்​ளவர்​கள் போலி ஆசாமிகள். ‘பிஹாரில் போட்​டி​யிடு​வ​தாக கூறி மாம்​பழம் சின்​னத்தை பெற்​றுள்​ளது’ குறித்து கேட்​கிறீர்​கள்.

அவர்​கள் தென் கொரி​யா, ஜப்பான், மொரீஷியஸ் தீவில் கூட மாம்​பழச் சின்​னத்​தில் போட்​டி​யிடலாம். இவ்​வாறு ராம​தாஸ் கூறி​னார். வன்​னியர்​களுக்கு 15 சதவீத இடஒதுக்​கீடு கோரி டிச.17-ம் தேதி சிறை நிரப்​பும் போராட்​டம் நடத்​தப்​படும் என பாமக தலை​வர் அன்​புமணி அறி​வித்​திருந்த நிலை​யில், இதற்​குப் போட்​டி​யாக டிசம்​பர் முதல் வாரத்​தில் 10.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டுக்​காக ராம​தாஸும் போராட்​டத்தை அறிவித்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *