வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக எந்த போராட்டத்துக்கும் தயார்: பாமக தலைவர் அன்புமணி உறுதி | Ready for any struggle for Vanniyar reservation: Anbumani

1376400
Spread the love

சென்னை: வன்​னியர்​களுக்கு இடஒதுக்​கீடு பெற, சிறை நிரப்​புவது உட்பட எத்​தகைய அறப்​போ​ராட்​டங்​கள், தியாகங்​களை செய்​ய​வும் தயா​ராகவே இருக்​கிறோம் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக தொண்​டர்​களுக்கு அவர் நேற்று எழு​திய கடிதம்: கல்​வி, வேலை​வாய்ப்​பில் வன்​னியர்​களுக்கு 20 சதவீததனி இடஒதுக்​கீடு வழங்க வேண்​டும். அனைத்து சமூகங்​களுக்​கும் அவர்​களது மக்​கள்​தொகைக்கு ஏற்ப இடஒதுக்​கீடு வழங்க வேண்​டும் என்​பது உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போராட​வே, கடந்த 1980-ல் வன்​னியர் சங்​கத்தை ராம​தாஸ் தொடங்​கி​னார்.

பின்​னர் 7 ஆண்​டு​கள் போராடி​யும் எது​வும் நடக்​காத நிலை​யில், 1987-ல் பெரி​யார் பிறந்​த​நாளான செப்​டம்​பர் 17-ம் தேதி சாலை மறியல் போராட்​டம் தொடங்​கியது. அந்த ஒரு வார தொடர் போராட்​டத்​தில் காவல் துறை நடத்​திய தடியடி தாக்​குதலிலும், உடலில் குண்​டு​கள் பாய்ந்​தும் 21 பாட்​டாளி​கள் உயிர்த் தியாகம் செய்​தனர்.

நமது சமூகநீதி நாளான செப்​டம்​பர் 17-ம் தேதி இடஒதுக்​கீட்டு போராட்ட தியாகி​களின் படங்​கள், நினைவு தூண்​களுக்கு மலர் தூவி​யும், மாலை அணி​வித்​தும் மரி​யாதை செலுத்த வேண்​டும். அனை​வரும் தங்​கள் வீடு முன்பு ‘வன்​னியர் இடஒதுக்​கீட்டு போராட்ட தியாகி​களுக்கு வீர​வணக்​கம்’ என்ற பதாகையை அமைத்து மரி​யாதை செலுத்த வேண்​டும்.

நமக்​கான உரிமை​கள் எளி​தாக கிடைத்​து​விட​வில்​லை. கடும் போராட்​டங்​கள், தியாகங்​கள் மூல​மாகவே உரிமை​களை பெற்​றுள்​ளோம். இன்​றைய நிலை​யில் வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத இடஒதுக்​கீடு என்​பதே சமூக அநீ​தி​தான். 15 சதவீத இடஒதுக்​கீடு என்​பதே உண்​மை​யான சமூகநீ​தி​யாக அமை​யும். அதை பெற, சிறை​களை நிரப்​புவது உட்பட எத்​தகைய அறப்​போ​ராட்​டங்​கள், தி​யாகங்​களை செய்ய தயா​ராகவே இருக்​கிறோம். அதுவே லட்​சி​யம். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *