வன்னியர் இடஒதுக்கீட்டை நிறைவேற்றும் அளவுக்கு சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும்: தொண்டர்களுக்கு அன்புமணி கடிதம்  | Anbumani letter PMK cadres

Spread the love

சென்னை: வன்​னியர் இடஒதுக்​கீட்டு சட்​டத்தை நிறைவேற்​றும் அளவுக்​கு டிச.17-ம் தேதி சிறை நிரப்​பும் போராட்​டம் அமைய வேண்​டும் என்று பாமக தொண்​டர்​களுக்கு அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று பாமக தலை​வர் அன்​புமணி தொண்​டர்​களுக்கு எழு​தி​யுள்ள கடிதம்: நமக்கே உரித்​தான கற்​களும், முட்​களும் நிறைந்த சமூகநீ​தியை நோக்​கிய இன்​னொரு போராட்​டப் பாதை​யில் பயணத்தை தொடங்​கி​யிருக்​கிறோம். தமிழகத்​தில் கல்வி மற்​றும் வேலை​வாய்ப்​பில் வன்​னியர்​களுக்கு குறைந்​தது 15 சதவீத இட ஒதுக்​கீடு வழங்​கப்படவேண்​டும் என்ற கோரிக்​கையை வலி​யுறுத்தி வரும் டிச.17-ம் தேதி தமிழகம் முழு​வதும் அரசு அலு​வல​கங்​களை முற்​றுகை​யிட்டு சிறை நிரப்​பும் போராட்​டத்தை நடத்த இருக்​கிறோம்.

திமுக அரசின் இந்த சமூகநீதி நம்​பிக்​கைத் துரோகங்​கள், மோசடிகள், பித்​தலாட்​டங்​கள் ஆகிய​வற்றை மக்​களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்​டும். அத்துடன் நமது இடஒதுக்​கீட்டு கோரிக்கையையும் வென்​றெடுக்க வேண்​டும் என்ற நோக்​கத்​துடன் டிச.17-ம் தேதி சிறை நிரப்​பும் போராட்​டத்​துக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. இடஒதுக்​கீட்டை நிறைவேற்​றும் அளவுக்கு சிறை நிரப்​பும் போராட்​டம் அமைய வேண்​டும். போராட்​டக் களத்​தில் உங்​களு​டன் கைக்​கோர்த்து போ​ராடு​வதற்​கான நாளுக்​காக காத்து கொண்​டிருக்​கிறேன். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *