வன்னிய சமூக எம்எல்ஏக்கள் முதல்வருக்கு அழுத்தம் தர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் | Anbumani urged to Vanniyar community MLAs should put pressure on cm

1370148
Spread the love

கள்ளக்குறிச்சி: ​தி​முக, அதி​முக, காங்​கிரஸ் கட்​சிகளில் உள்ள வன்​னியர் எம்​எல்​ஏக்​கள், உள் இடஒதுக்​கீடு தொடர்​பாக முதல்வரை சந்​தித்து அழுத்​தம் கொடுக்க வேண்​டும் என்று விழுப்​புரத்​தில் நடந்த ஆர்ப்​பாட்​டத்​தில் பாமக தலை​வர் அன்​புமணி கூறினார்.

வன்​னியர்​களுக்கு உள்​இடஒதுக்​கீடு கோரி​யும், தமிழக அரசைக் கண்​டித்​தும் விழுப்​புரத்​தில் நேற்று நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் அன்​புமணி பேசி​ய​தாவது: அனைத்து சமு​தா​யத்​தினருக்​கும் இடஒதுக்​கீடு கோரி ராம​தாஸ் 45 ஆண்​டு​களாக போராடி வரு​கிறார்.

ஆனால், ஆளுங்​கட்​சி​யாக இருப்​பவர்​கள் அதை நிறைவேற்ற மறுக்​கிறார்​கள். திமுக​வுக்​கும், முதல்​வர் ஸ்டா​லினுக்​கும், சமூக நீதிக்​கும் சம்​பந்​தம் கிடை​யாது. திமுக வன்​னியர்​களுக்கு விரோ​தி.

திமுக​வில் வன்​னியர் சமு​தா​யத்​தைச் சேர்ந்த 23 எம்​எல்​ஏக்​கள், 5 எம்​.பி.க்​கள் உள்​ளனர். இவர்​களில் ஒரு​வ​ராவது முதல்​வரை சந்தித்து உள் இடஒதுக்​கீடு குறித்து பேசி​யிருக்​கிறார்​களா, சட்​டப்​பேர​வை​யில் உள்ள வன்​னியர் சமூகத்​தைச் சேர்ந்த 38 எம்எல்ஏக்​கள் உள்​ளனர்.

இவர்​கள் அனை​வரும் வன்​னியர்​களுக்கு இடஒதுக்​கீடு கொடுத்​தால்​தான் நாங்​கள் பேர​வைக்​குள் செல்​வோம் என்று போராட்​டம் நடத்த தயா​ரா, இனி​யா​வது திமுக, அதி​முக, காங்​கிரஸ் கட்​சிகளில் உள்ள, வன்​னியர் சமூகத்​தைச் சேர்ந்த எம்​எல்​ஏ-க்​கள் அனை​வரும் முதல்​வரை சந்​தித்​து, உள்​இடஒதுக்​கீடு வழங்​கு​மாறு அழுத்​தம் கொடுக்க வேண்​டும்.

வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் எனக்கு உடன்​பாடு கிடை​யாது. உண்​மை​யில் 18 சதவீத இடஒதுக்​கீடு வழங்க வேண்​டும். இனியும் வன்​னியர்​களுக்கு இடஒதுக்​கீடு கொடுக்​க​வில்லை என்​றால், சாலை மறியல் போராட்​டம் நடத்​தப்​படும். இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் கலந்து கொண்​ட​வர்​கள் தெருத் தெரு​வாகச் சென்று பிரச்​சா​ரம் செய்​யுங்​கள்.

2026 தேர்​தலில் ஒரு வன்​னியர் கூட தி​முக​வுக்கு வாக்​களிக்​கக் கூடாது என்​றும் மக்​களிடம் எடுத்​துரைக்க வேண்​டும்​. இவ்​வாறு அன்​புமணி பேசி​னார்​. 3 எம்எல்ஏ-க்கள் சஸ்பெண்ட் இதற்கிடையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாமக எம்எல்ஏ-க் கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *