வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
மேலும், 60 சதவிகிதத்துக்கு மேல் உடலில் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு ரூ. 75,000, 40 – 50 சதவிகிதம் உடலில் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் படுகாயமடைந்தவர்களுக்கு கூடுதலாக ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு மாதம் ரூ. 6,000 வாடகை உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும், இந்த நிவாரணங்கள் முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் என்று பினராயில் விஜயன் தெரிவித்துள்ளார்.