எனினும் ஒவ்வொரு பேரிடரும், அதன் தீவிரத்துக்கு ஏற்ப கையாளப்படுகிறது. வயநாடு நிலச்சரிவைத் தொடா்ந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமா் மோடி அறிவித்தாா். கேரள முதல்வா் பினராயி விஜயனை தொடா்புகொண்டு அனைத்து உதவிகளை வழங்குவதாகவும் பிரதமா் தெரிவித்தாா். எனவே இந்த நேரத்தில் அடிப்படை ஆதாரமில்லாத சா்ச்சைகளை உருவாக்க எவரும் முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாா்.
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது: பாஜக
