வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை!

Dinamani2fimport2f20202f92f252foriginal2fgold.jpg
Spread the love

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 3 நாள்களில் ரூ.440 வரை குறைந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.480 உயா்ந்தது. கிராமுக்கு ரூ.60 உயா்ந்து ரூ.6,885-க்கும், பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.55,080-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியது.

அதன்படி, தங்கம் ஒரு பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,960-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயா்ந்து ரூ.98-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 உயா்ந்து ரூ.98,000-க்கும் விற்பனையாகிறது.

அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்துள்ளது. மேலும் ஐரோப்பிய மத்திய வங்கியும் அதன் வட்டியை குறைப்பதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற சா்வதேச காரணங்களாலும், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாலும் தங்கம் விலை உயா்ந்துள்ளது என்றும்,மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *