வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை | Raid at former aiadmk mla house

1369921
Spread the love

விருத்தாசலம்: கடலூர் மாவட்​டம் பண்​ருட்டி சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் கடந்த 2016-21 வரை எம்​எல்​ஏ​வாகப் பதவி வகித்​தவர் சத்யா பன்​னீர்​செல்​வம். அதே காலத்​தில் அவரது கணவ​ரான பன்​னீர்​செல்​வம் நகர்​மன்​றத் தலை​வ​ராக இருந்​தார்.

பன்​னீர்​செல்​வம் நகர்​மன்​றத் தலை​வ​ராக பதவி வகித்த காலத்​தில் வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்த வழக்​கில் கடந்த ஆண்டு பிப்​ர​வரி மாதம் அவரது வீட்​டில் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் சோதனை நடத்​தினர். அதன் பின்​னர் கட்​சிப் பணி​களில் தீவிர​மாக சத்யா பன்​னீர்​செல்​வம் ஈடு​பட்டு வந்​தார். அவருக்கு அதி​முக மாநில மகளிரணி துணைச் செய​லா​ளர் பதவி வழங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், ‘தமிழகத்தை மீட்​போம் மக்​களைக் காப்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொண்​டுள்ள அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கடந்த 13-ம் தேதி பண்​ருட்​டிக்கு வந்​த​போது, பெரும் கூட்​டத்​தைக் கூட்டி அவரது பாராட்​டைப் பெற்​றார்.

இச்​சூழலில் நேற்று அதி​காலை கள்​ளக்​குறிச்சி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்​ய​ராஜ் தலை​மையி​லான 15 போலீ​ஸார் சத்யா பன்​னீர்​செல்​வத்​தின் வீட்​டுக்​குச் சென்​று, வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்த வழக்​கில் சோதனை நடத்​தினர். சோதனை​யின்​போது திடீரென சத்யா பன்​னீர்​செல்​வம் மயங்கி விழுந்​தார். பின்​னர் அவரை மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *